தற்போதைய வடிவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சமர்ப்பிக்க வேண்டாம்

தற்போதைய வடிவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சமர்ப்பிக்க வேண்டாம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தற்போதைய வடிவில் சமர்ப்பிக்க வேண்டாம் - மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை, அதன் தற்போதைய வடிவில் நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது. 

பயங்கரவாதத் எதிர்பபுச் சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் ஆராய வேண்டியது அவசியமானது என மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, பயங்கரமான உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம், அவர்களில் பலர் எழுச்சி மற்றும் அரசின் பதிலளிப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.