10 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்

10 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்

10 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் வெட்டு அமுலாகவுள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொலன்னாவ நீர்விநியோக நிலையத்தின் பிரதான கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.