குளியலறையில் அத்துமீறி காணொளி பதிவு செய்து மிரட்டிய நபர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் காணொளிகளை பதிவு செய்து அச்சுறுத்தும் அடையாளம் தெரியாத நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் இன்று (22) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக சில பெண்கள், சிறார் மற்றும் மகளீர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமையவே குறித்த சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிறார் மற்றும் மகளீர் பாதுகாப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

இதன்படி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் இன்று முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.