அனர்த்த காலங்களில் உயிர் காக்க ஒன்றிணைந்த Mobitel, Hutch, Dialog, Airtel!

அனர்த்த முன்னெச்சரிக்கை திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அனர்த்த காலங்களில் உயிர் காக்க ஒன்றிணைந்த Mobitel, Hutch, Dialog, Airtel!

அனர்த்த முகாமைத்துவ முன்னெச்சரிக்கை திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களின் உயிரை பாதுகாப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, SLTMobitel, Hutch, Dialog மற்றும் Airtel ஆகியன இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. 

இதற்கான உடன்படிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு கூறுகிறது.