கட்டுப்பணம் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

கட்டுப்பணம் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 32 வேட்பாளர்கள் இன்று (12) வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு அரசியல் கட்சியும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவார்களெனவும் வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் 14ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.