அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைக்கால கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவு நிலுவைத் தொகை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு குறித்த பணம் வழங்கப்படுமென ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குவது தொடர்பான யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.