கஜேந்திரகுமார் விவகாரம்: உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் டிரான் பணிப்பு!

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணித்துள்ளார்.

கஜேந்திரகுமார் விவகாரம்:  உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் டிரான்  பணிப்பு!

தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் கூட்டம் ஒன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர பொன்னம்பலத்துக்கும் காவல்துறை அதிகாரிக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தாம் துப்பாக்கியால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பில் நாளைய தினம் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.