மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு - இரண்டு இராணுவத்தினர் உட்பட!

மிஹிந்தலை - சிப்பிக்குளம் பிரதேசத்தில் மின்னல் தாக்கி மூன்று பேர் நேற்று (11) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு - இரண்டு இராணுவத்தினர் உட்பட!

மிஹிந்தலை - சிப்பிக்குளம் பிரதேசத்தில் மின்னல் தாக்கி மூன்று பேர் நேற்று (11) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மன்னாவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே அவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மீன்பிடிப்பதற்காக 10 பேர் வரை வாவிக்கு சென்றிருந்த நிலையில் மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் இரண்டு இராணுவ வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.