சிறுவனை கடுமையாக தாக்கும் தந்தை - மீண்டுமொரு சிறுவர் வன்முறை - காட்சி இணைப்பு

முல்லைத்தீவு - வெலிஓயா (மணலாறு) பன்சல்வில பகுதியில் தந்தை ஒருவர் தனது சிறிய மகனைத் தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. 

மகனுக்கு உணவை ஊட்டும் அதேநேரம், தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளார். 

அருகாமையில் உள்ள நபர் ஒருவர், இதனை காணொளி பதிவு செய்துள்ளார். 

தான் இந்த காணொளியை பொலிஸாருக்கு வழங்குவதாக அதனை பதிவு செய்த நபர் கூறிய போதும் தான் அதற்கு பயப்படப் போவதில்லை என தாக்குதல் நடத்தும் நபர் கூறியுள்ளார். 

முல்லைத்தீவு - வெலிஓயா - பன்சல்வில கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

வெலிஓயா ‌- எனப்படுவது முன்னர் மணலாறு என அறியப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதியாகவே இருந்தது.

அங்கு சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்ததன் பின்னர் சில கிராமங்கள் பெயர் மாற்றம் பெற்றன.