தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

சீரற்ற காலநிலையுடன் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வரையில் குறித்த பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் குறித்த வளாகம் தற்காலிகமாக மூடப்படும் என அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்

தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகள் மற்றும் பாதிப்புகளை கருத்திற் கொண்டு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசனைக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.