ஓகஸ்ட் 30ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் மாபெரும் பேரணி? 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளான ஓகஸ்ட் 30ஆம் திகதி மன்னார் மாவட்டம் தழுவிய ரீதியில் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அம்பாறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விளக்கமளிக்கையில், 

மன்னார் 'சதொச' மனித புதைகுழி வளாகத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கான நீதி இலங்கை அரசாங்கத்தினால் பெற்றுத்தரப்படும் என்பதை தாம் ஒருபோதும் நம்பப் போவதில்லை எனவும் அதன் காரணமாகவே சர்வதேசத்தின் உதவியை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.