யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது!

காசாவில் ஹமாஸ் தரப்பினருக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாதென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது!

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இடம்பெற்று வரும் தாக்குதலில், ஹமாஸ் படையினரால் கைப்பற்றப்பட்ட பல இடங்கள் மீண்டும் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும், தங்களது வீடுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது.