பெண்கள் - சிறுவர்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை வழங்குவதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் - சிறுவர்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக 109 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி, முறைப்பாடுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் சேவையில் இருக்கும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.