தொழிலாளர்களின் நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பில் அவதானம்!

தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பில் அவதானம்!

எட்டியாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 தொழிலாளர் நம்பிக்கை நிதியத்தின் நிலுவைத் தொகை 4,000 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தோட்ட தொழில்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை நாளை (05) ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.