அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: தாய் - மகள் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: தாய் - மகள் பலி!

கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த சிற்றுந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஹம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த தாயும்(57), மகளும்(31) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.