யாழில் நாளை முதல் தமிழர் பெருவிழா இடம்பெறவுள்ளது!

யாழில் நாளை முதல் தமிழர் பெருவிழா இடம்பெறவுள்ளது!

யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் இந்த நிகழ்வு  இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண கலையகம், உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், யாழ்ப்பாணம்  தமிழ் இசைச்சங்கம், சென்னை கவிஞர்- முனைவர்  ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் ஆகியன இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை மணிமேகலை அமுதசுரபி பெற்ற இலங்கை மணிபல்லவத் தீவில் 120 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈழத் தமிழுலகின் வரகவி நயினை நாகமணிப் புலவர் இயற்றிய  நயினை மான்மியம் என்ற மகாகாவியம், முனைவர் ந.சுலோச்சனா சகாதேவன் எழுதிய உரையுடன் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிகழ்வு ஜனவரி 23ம் திகதியும் 24ம் திகதியும் பிற்பகல் 2மணிக்கு இலங்கை மணிபல்லவத் தீவு அமுதசுரபி அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சென்னை கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் பாட்டழகன் தெரிவித்துள்ளார்.