ரணிலின் சிலிண்டர் சின்னத்திற்கு உரிமை கோரும் அரசியல் கட்சி???

ரணிலின் சிலிண்டர் சின்னத்திற்கு உரிமை கோரும் அரசியல் கட்சி???

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

குறித்த சின்னம் தங்களது கட்சிக்குச் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது அமைப்புக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய அந்தச் சின்னத்தை மீளப்பெறுமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.