கல்முனையில் பாடசாலைகள் ஸ்தம்பிதம் - அஞ்சலகங்கள் முடக்கம்!

 கல்முனையில் பாடசாலைகள் ஸ்தம்பிதம் - அஞ்சலகங்கள் முடக்கம்!


இலங்கையின் பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் இன்று (09) செவ்வாய்க்கிழமை முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பாடசாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.  

கல்முனை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவின்மையால் பாடசாலைகள் நடைபெறவில்லை. 

இதேவேளை கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் அஞ்சல் சேவையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. 

அதிபர் ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வினை வழங்கும்படி வலியுறுத்தி அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், ஏனைய துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்க முடிந்தது.