சட்டவிரோதமாக தங்கம் வைத்திருந்த இலங்கைப் பெண் நேபாளத்தில் கைது!

நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் வைத்திருந்த இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

சட்டவிரோதமாக தங்கம் வைத்திருந்த இலங்கைப் பெண் நேபாளத்தில் கைது!

குறித்த பெண் சூட்சுமமான முறையில் தங்கத்தை ஆடைக்குள் மறைத்து, தூள் வடிவில் கடத்த முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

டுபாயில் இருந்து வந்த இந்த பெண் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக நேபாள பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவரிடமிருந்து ஒரு கிலோகிராம் 300 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.