மனிதகுலத்திற்கே பேரழிவை தரும் செயற்பாடுகளை செய்யும் நல்லூர் பிரதேச சபையினர்!!

இணுவில் காரைக்கால் சிவன் கோயில் மற்றும் காரைக்கால் இந்து மயானத்திற் அருகாமையில் விவசாய நிலங்கள், குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமையப்பெற்ற திண்மக்கழிவு மீள் சுழற்சி மையத்தில் நடப்பது என்ன? 

 மனித குலத்திற்கே அழிவை தரும் பிளாஸ்ரிக், பொழித்தீன், மற்றும் பிரிகையடையா திண்மக் கழிவுகளை அதிகமாக கொட்டப்பட்டு உரிய முறையில் பிரித்தெடுக்காமல் மலை போல் குவித்து அதனை சூழவுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது தற்போது காரைக்கால் இந்து மயானத்திற்குள் பாரிய குழி தோண்டி அதனுள் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது  

 இதனால் நிலக்கீழ் நீர் நிலைகளுடன் கலந்தால் குடிநீரின் நிலை என்னாகும் அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள் குடிமக்கள் உடல் நிலை என்னாகும்.

 இதற்கான தீர்வு தான் என்ன?