இந்தியாவின் சதித்திட்டம் தெரிந்தே துணைபோகும் பழ. நெடுமாறன் காசி ஆனந்தன்

முன்கூட்டியே தலைவர்களுக்கு தெளிவேற்படுத்தப்பட்டது

தெளிவான விளக்கம் ஒலிப்பதிவு 

https://twitter.com/i/spaces/1OyJAVAAVzDxb?s=20

இந்தியா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மூடிமறைத்து அதன் நலன்களுக்காக மட்டுமே செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரம் தமிழீழத் தேசியத் தலைவரின் ஒப்பற்ற தியாகத்தையும் பெருமையையும் உண்மையையும் குழிதோண்டி புதைக்கவும் இதனூடாக ஈழத்தமிழ் மக்களின் கூட்டு எழுச்சியை அவர்களின் உணர்வெழுச்சியை உடைத்து அவர்களுக்குள் கருத்துமோதல்களை உருவாக்கி புலம்பெயர் போராட்ட வலுவை சிதைக்கும் இந்திய புலனாய்வு சதி நடவடிக்கைக்கு பழ நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் இருவரும் துணை போவது அவர்களின் மீதான ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை சிதைத்து விட்ட வரலாற்று துரோகமாக பதிவாகிவிட்டது. தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்களின் பெருமைகளை தியாகங்களை குழிதோண்டிப் புதைத்துத்தான் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என யாரும் கருதினால் அது கொடிய விசத்தை தமிழ்த்தாய்க்கு ஊட்டுவதற்கு நிகரானது. இந்த சதித்திட்டத்திற்குள் வீழ்ந்தழிந்து போகாது ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என உரிமையுடன் வேண்டுகிறோம்.

https://www.youtube.com/live/7xxWrfbHlWs?feature=share