மஹாராஷ்டிராவில் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 பேர் பலி!

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பல்தானா பகுதியில், பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில், 3 சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.

மஹாராஷ்டிராவில் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 பேர் பலி!

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பல்தானா பகுதியில், பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில், 3 சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.

அத்துடன், சாரதி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின், யாவத்மால் பகுதியிலிருந்து, 33 பேருடன் புனேவுக்கு பயணித்த குறித்த பேருந்து, பல்தானா பகுதியில், இன்று அதிகாலை 2 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில்லொன்று வெடித்தமையால், குறித்த பேருந்து, விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.