வடக்கில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு ஊழியர்கள் போராட்டம்! 

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுத்தனர்.

வடக்கில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு ஊழியர்கள் போராட்டம்! 

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுத்தனர்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்பள உயர்வை கோரியும் நிரந்தர நியமனத்தை அமுல்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை  முன்னெடுத்தனர்.

ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியை தாம் மேற்கொண்ட போதும் தமக்கு இதுவரையும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

தமக்கான ஊதியம் 22,000 வரையே வழங்கப்படுவதனால் அதனைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினர்.

இதனால் உரிய அதிகாரிகள் தமது ஊதியம் தொடர்பான கோரிக்கையினையும் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையினையும் நிறைவேற்ற வேண்டும் என இதன்போது கேட்டுக்கொண்டனர்.