சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது!  

சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது!  

இந்தியாவின் பல பகுதிகளில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதன்படி, பெங்களுர், மைசூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பெங்களுர் தனியார் மருத்துவமனையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 77 சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கர்ப்பிணித் தாய்மாரின் வயிற்றில் வளரும் குழந்தை பெண் குழந்தையாக இருப்பின் அதனை சட்டவிரோத முறையில் கருக்கலைப்பு செய்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

 இதனை தடுக்கும் வகையில் சோதனை முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.