பாஜக கூட்டணி 400+ தொகுதிகளில் வெற்றி பெரும் - தெலங்கானா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை!

பாஜக கூட்டணி 400+ தொகுதிகளில் வெற்றி பெரும் - தெலங்கானா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை!

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் நாகர்கர்நூல் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர்,

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தெலுங்கானா மக்கள் தற்போதே மூன்றாவது முறையும் மோடி என கூறத் தொடங்கிவிட்டார்கள்.