“விடுதலைக்கு ஏங்கி யாம் பாடும் இறுதி பாடல்” சாந்தன் எழுதிய இறுதி கடிதம்!

“விடுதலைக்கு ஏங்கி யாம் பாடும் இறுதி பாடல்” சாந்தன் எழுதிய இறுதி கடிதம்!

உயிரிழந்த சாந்தன் இறுதியாக எழுதிய கடிதம் என்ற வகையில் அவருடைய கையெழுத்துடனான கடிதம் ஒன்றை கொடுந்தமிழன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவித்துள்ளார்.

Oruvan

சகோதரனுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்

Oruvan

சாந்தன் தனது சகோதரனுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனை அவரது சகோதரர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பார்வையிட்டிருந்தார்.

இதன்போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சாந்தன் இன்று காலை உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சாந்தனின் உடலை காண்பதற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Oruvan

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் காலமாகியுள்ளார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி உடல் நல குறைவால் திருச்சி அரச வைத்தியசாலையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டிந்தார்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்கான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.