உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் நவம்பர் 12-ந் திகதி முதல் சுரங்க பாதைக்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் பாதுகாப்பாக இன்று இரவு மீட்கப்பட்டனர். 

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்பு!

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 41 தொழிலாளர்களும் கடந்த 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் மனநிறைவை தந்திருக்கிறது. 

முன்னதாக கடந்த தீபாவளி தினத்தன்று குறித்த சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள், நிலச்சரிவு ஏற்பட்டமை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் சிக்குண்டனர்.

எனினும் உடனடியாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் ஒக்சிஜன் என்பன வழங்கப்பட்டன.

இந்தநிலையில் இயந்திரத்தின் மூலம் அவர்கள் வெளியேற மாற்றுப்பாதை அமைக்க முயற்சிக்கப்பட்ட போதும் அது பலனிக்கவில்லை.

எனவே கைகளால் செங்குத்தாக துளையிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதன் மூலமே ஒவ்வொருவராக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.