4.2 கோடி பெறுமதியான 35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!

கொழும்பு - ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலையிலிருந்து சுமார் 4.2 கோடி ரூபா பெறுமதியான, 35 கிலோகிராம் ஹசீஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்

4.2 கோடி பெறுமதியான 35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!

இந்த போதைப்பொருள் 5 பொதிகளாக தயாரிக்கப்பட்டு, இத்தாலியில் இருந்து கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்திற்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகத்துக்கிடமான  பொதிகளை ஒருகொடவத்தை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் ஆய்வுகூடத்திற்கு கொண்டுசென்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பொதிகளில் பெறுநரின் முகவரிகள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தொலைபேசி எண்கள் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹசீஸ் போதைப்பொருளை கைப்பற்றிய சுங்க வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் அவற்றை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.