யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 சிசுக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 5 குழந்தைகளை பிரசவித்ததாகவும், குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.