9 நாட்களில் 50,500 சுற்றுலாப் பயணிகள் வருகை!

9 நாட்களில் 50,500 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாள்களில் 50,537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 686,321 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.