எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளது.

இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாயினால் குறைத்து 311 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாயாகும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாயாகும்.

அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாயினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 183 ரூபாயாகும்.

ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை
கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சைனோபெக் நிறுவனங்களும் தமது எரிபொருட்களின் விலைகளை இதற்கு சமாந்தரமாக குறைக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.