நிந்தவூரில் பேருந்து  மோதி மோட்டார் சைக்கிள் விபத்து!

நிந்தவூரில் பேருந்து  மோதி மோட்டார் சைக்கிள் விபத்து!

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பேருந்து மோட்டர் சைக்கிளில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர்  5 ம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் இன்று பகல் 11.30 மணியளவில்  பொத்துவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார்  பேருந்து மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற வயோதிர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.