பருத்தித்துறை பெண் பொலிஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 26 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கலேவெல தல்கிரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

பருத்தித்துறை பெண் பொலிஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார். 

படுகாயமடைந்த நிலையில் அவர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.