தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் 3 கிலோகிராம் கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறிலங்கா காவல்துறையின் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரால் சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா, கிளிநொச்சி பகுதியில் இருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனவும், 2005ஆம் ஆண்டு முதல் பல வருடங்களாக சிறையில் இருந்தவர் எனவும், பின்னர் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.