அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஊடக செயலமர்வு!

அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஊடக செயலமர்வு!

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் நிலைத்து நின்று சாதனைகள் படைத்து பல நற்பிரஜைகளை உருவாக்கியுள்ள ஜே.எம் மீடியா நிறுவனம் 9 ஆவது வருடமாகவும் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்துள்ள இலவச ஊடக செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) மாவனல்லை எம்.பி.சீ.எஸ் வரவேற்பு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த இலவச ஊடக செயலமர்வு தேசிய புகழ் பெற்ற பல ஊடகவியலாளர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளதாக ஜே.எம் மீடியா நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்தீன் தெரிவித்தார்.

ஆசிரியர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் என நாட்டின் எப்பாகத்திலிருந்தும் அனைவரும் இச்செயலமர்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.

முழுமையாக பங்குபற்றும் அவைருக்கும் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு 
ஜே.எம் மீடியா கல்லூரி, இலங்கை - 0777 128 348