தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி!

தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி!

இந்திய அரசின் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய அரசின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட இருந்தபோது இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களால், குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. 

அதற்கிணங்க, ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.