கிளிநொச்சியில் 47 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - கனகாம்பிகைக்குளம் பிரசேதத்தில் 47 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சியில் 47 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

சூட்சுமமான முறையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் 22 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கஞ்சா 11 பொதிகளில் இடப்பட்டு இருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மீனவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.