தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் 

 தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் 

சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் சனிக்கிழமை (23) ஆரம்பமாகியது.

இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும். அந்த வகையில் இன்றையதினம் பௌர்மிதினம் ஆகையால் போராட்டம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகிய போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.