இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் !  

இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் !  

திருகோணமலை - மொரவெவ பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்பிய போது வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.