விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி 

விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி 

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார் .

பெரியகல்லாறு மயான வீதியில் இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில் வவேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் 16 வயதுடைய மாணவனே  உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த மற்றுமொரு மாணவன் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.