சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டம் 

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டம் 

எதிர்வரும்  02ஆம்  திகதி காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்க  சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை  தெரிவித்துள்ளார்.

பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன், நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக, தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.