கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை (08) தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியில் உள்ள ஆபத்தான பாறை கற்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காகவே  வீதி மூடப்படுவதாகும் அவர் தெரிவித்துள்ளார்.