இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவிக்கான நிதி ஒதுக்கீடு!

இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு அவசர சந்தர்ப்பங்களில் உதவும் வகையில் இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவிக்கான நிதி ஒதுக்கீடு!

இதன்படி, இலங்கை அரசாங்கம் 20,000 முதல் 30,000 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 அமெரிக்க டொலர் நிதியை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர சந்தர்ப்பங்களில் உதவுவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் அவசர மருத்துவம், உணவு உள்ளிட்ட நலன் கருதி குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை இஸ்ரேலில் உள்ள இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிவதுடன்,  அவர்களில் 90 சதவீதமானோர் முதியோர் இல்லங்களில், பராமரிப்பாளர்களாக பணியாற்றுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.