இந்தியா அணி வெற்றியை கொண்டாடினாலும் - ரசிகர்கள் சோகத்தில்!  

இந்தியா அணி வெற்றியை கொண்டாடினாலும் - ரசிகர்கள் சோகத்தில்!  

டி-20 உலகக்கிண்ண கிண்ணத்தை இந்திய அணி சுவீகரித்தமையை இட்டு வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினாலும், முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்புக்களானது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின், முன்னணி சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவும் டி-20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்.

உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன்.

இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும். டி20 உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.

இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக 2024 டி20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சகலதுரை வீரராக இடம் பெற்றார். இந்த உலகக் கிண்ண தொடரில் அவருக்கு போதிய பந்து வீசும் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.