ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் ஊழியர்கள் பற்றிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் ஊழியர்கள் பற்றிய அறிவிப்பு!

இந்த ஆண்டு தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்