பம்பலப்பிட்டியில் துப்பாக்கிப் பிரயோகம் : மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது!

பம்பலப்பிட்டி – கரையோர வீதி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டியில் துப்பாக்கிப் பிரயோகம் : மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது!

பம்பலப்பிட்டி – கரையோர வீதி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, குறித்த இரு வாகனங்களும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், மதுவரி பரிசோதகர் உட்பட திணைக்களத்தின் 4 அதிகாரிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

காரில் இருந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த வாகனத்தின் மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மகிழுந்திலிருந்த நபர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.