யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பல்கலைக்கழகங்களில் தற்கொலை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பல்கலைக்கழகங்களில் தற்கொலை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் பதிவாகியுள்ளன.

இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தமது உயிரை மாய்த்து கொண்டுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மஹரகம - கட்டுவாவல பகுதியில் உள்ள, பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விடுதியில் சுமார் 64 மாணவர்கள் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்.

மாணவர் விடுதியின் இரண்டாம் மாடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.