காலி முகத்திடலில் சிறுமியை கடத்த முயன்றவர் கைது!

கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைக்கு தனது பெற்றோருடன் சென்ற ஏழு வயது சிறுமியை கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி முகத்திடலில் சிறுமியை கடத்த முயன்றவர் கைது!

கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைக்கு தனது பெற்றோருடன் சென்ற ஏழு வயது சிறுமியை கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 15 வயதுடைய ஒரு சிறுமியும் 16 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

சிறுவர் இல்லத்தின் உரிமையாளர்களால் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது சிறுமிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.