ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு - தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு - தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

அத்தனகலு ஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் நேற்றைய நிலவரப்படி அதிக நீர் மட்டம் பதிவாகியுள்ளது.

இதனை நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குக்குலே கங்கை அனல்மின் நிலைய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு சுமார் 80 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், சிறிய ஆற்றின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.