ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் விதித்த உத்தரவு!

குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை.  எனவே தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று இந்திய கிரிக்கட் வீரர்  ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் விதித்த உத்தரவு!

குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை.  எனவே தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று இந்திய கிரிக்கட் வீரர்  ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியும் 2012ஆம் ஆண்டு திருமணத்தில் இணைந்தனர்.

இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ள நிலையில்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் திருமண வாழ்க்கை முறிந்தது.

இதனையடுத்து ஷிகர் தவானின் மனைவி அவுஸ்திரேலியாவுக்கு மகனையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் தவானின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட புதுடில்லி நீதிமன்றம்,  குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக தவானின் மகனை இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.